Thursday 30 June 2011

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள். 

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு . 

கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். 

உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும். 

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம் 

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம். 

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்க

Wednesday 29 June 2011

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?



பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.

குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

செக்ஸ் உறவின் போது நல்ல சிந்தனை இருக்க வேண்டும்!


செக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்றைய பகுதியில் காண்போம்.

ஒரு ஆணும், பெண்ணும் கூடிக் கலந்து குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. உடலுறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும். பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்.

இப்படிப்பட்ட காலத்தில் கணவனது விந்து பரிசுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். அவன் தனது உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பச்சைக்காய்கறிகள், இளநீர், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களையே உண்டு, செயற்கை உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அப்போது தான் விந்து பரிசுத்தமாக, வீரியம் மிக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட விந்தினால் தான், உடனே கருப்பிடிக்க ஏதுவாகும். அல்லது வீரியமற்ற விந்து உருவாகி, அதனால் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படலாம். எப்படி பாலைக் காய்ச்சி, சிறிதளவு தயிரில் ஊற்றினால், அது எல்லாம் தயிராகிறதோ, அது போல, நல்ல விந்தானது, கருப்பையில் சென்ற உடனே, அங்குள்ள கரு முட்டையோடு இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது.

மேலும், விந்தணுக்கள் அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகவும், பெண்ணின் சுரோநிதம் என்ற பொருள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும் ஜனிப்பதாக, காமசூத்திரம் சொல்கிறது. ஆணின் விந்தணுச் சுரப்பிலும், பெண்ணின் சுரோனிதச் சுரப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஆனால் இரண்டுமே சம அளவில் நிகழ்ந்தால், ஒன்றை ஒன்ற டாமினேட் செய்ய முடியாமல், இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட அலியாக குழந்தை உருவாகிறது.

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?


உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.
உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.


இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?


பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்...

இப்பிரச்சினைக்கான காரணங்கள்!

இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸில் அவ்வளவாக நாட்டமிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள். முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது, வெறித்தனமான நடவடிக்கைகளைக் கையாள்வது என்றெல்லாம் நடந்து கொள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின் மீது வெறுப்பு ஏற்படலாம்.கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள்.

தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உற வைத் தவிர்ப்பார்கள். கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினை யைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு.

விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.


உடல் நலம் குன்றிப்போன ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், அவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. மீறி பிறக்கும் குழந்தை நோயுற்றதாகவோ, அல்லது குறைபாட்டுடனோ தான் இருக்கும். பெண், உடல் நலம் குன்றி இருந்தால், அவளது வயிற்றில் கருத் தங்காமல் பாதியிலேயே அழிந்து விடும். இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

அதாவது, ஆணும், பெண்ணும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடக்கூடாது. ஒரு அளவோடு தான் ஈடுபடவேண்டும் என்கிறது காமசூத்திரம். அப்படி அளவை மீறிக் கொண்டால், ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கரு முட்டைகளும் சரியான முதிர்ச்சி அடையாமல் போகும். முதிர்ச்சியற்ற விந்தணுக்கள், முதிர்ச்சியற்ற கரு முட்டைகளால், கருத்தரித்தல் நிகழ வாய்ப்பே இல்லை. அடிக்கடி உறவு கொள்ளும் போது, விந்தணுக்களும், கரு முட்டையும் முழுமையான வளர்ச்சி பெற ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. அவை முதிர்ச்சி அடையும் முன்பே அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம், விலை மாதர்கள் தான். விலைமாதர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி, உடலுறவு கொள்வதால், அவர்களில் பெரும்பாலானோருக்கு,. குழந்தைப் பாக்கியம் இருக்காது. இதற்குக்காரணம், கரு முட்டை உற்பத்தியாகி, அவை முதிர்ச்சி அடையும் முன்பே உடலுறவில் அவர்கள் ஈடுபடுவது தான்.
சில தம்பதிகள், திருமணம் ஆகி ஓரிரு வருடங்கள் ஆகியும் குழந்தைப்பாக்கியம் இன்றி இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், உடலுறவு கொள்ளும் போது ஒரு முறையைத் தவறாமல் கையாள வேண்டும். அது மிக எளிதானது தான். ஆனால், முக்கியமானது. சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது விந்து வெளிப்பட்ட உடனே, தங்கள் குறியை,. பெண் குறியிலிருந்து வெளியில் எடுத்து, தள்ளிப்போய் படுத்துக்கொள்வார்கள். ஆனால் இது தவறான முறை. இப்படிச் செய்தால், அந்தப் பெண் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு தான்.

இப்படிச் செய்யாமல், விந்து வெளிப்பட்ட உடனே குறியை எடுக்காமல், சிறிது நேரம் ஆண்குறியை பெண் குறியின் உள்ளே, விந்து முழுவதுமாக வடியும் வரை வைத்திருக்க வேண்டும். தவிர, ஆண், தனது குறியை வெளியே எடுத்த பிறகும், பெண், அந்த இடத்திலேயே குறைந்தது 10 நிமிடங்களாவது ஆடாமல், அசையாமல் படுத்திருந்து, கணவனின் விந்தணுக்கள் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான், கருப்பைக்குள் விந்தணுக்கள் சென்று, கருப்பையின் உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதின்றி, சிலர், உடலுறவு கொண்ட மறுநாளே கர்ப்பம் தரித்து விட வேண்டும் என எண்ணுவார்கள். இது, யாருக்காவது, எப்போதாவது நிகழலாம். எப்போதும் இது சாத்தியமல்ல. கணவன், விந்தை வெளியேற்றி எழுந்த பிறகு 10 நிமிடம், ஆடாமல், அசையாமல் பெண் படுத்திருந்தால் மட்டும் போதாது, உடலுறவு கொண்ட தினத்திலிருந்து, ஒன்றிரண்டு வாரங்களுக்கு, அந்தப் பெண் அமைதியாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். கடின வேலைகளைத் தவிர்த்து நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்.

கூச்ச உணர்வு தான் கலவி இன்பத்தின் எதிரி


கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தான். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மையாகும்.

எனவே கணவனோ, மனைவியோ கூச்சமின்றிப் பேசினால் தான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசைகளைப் பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியும். எங்களிடம் வரும் சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வேதனையான விஷயம்.

அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மனதில் இருக்கும் கூச்சம். தனது ஆசைகளைச் சொன்னால் கணவர் நம்மைக் காமவெறி பிடித்தவள் என்று பெண்கள் நினைத்துக் கொள்வதும் அதே போல ஆண்கள் நினைத்துக் கொள்வதும் தான்.

இது குறித்து மருத்துவரிடம் கேட்கலாமா? அல்லது மற்ற தெரிந்த நண்பர்களிடம் அல்லது தோழியரிடம் கேட்கலாமா? கேட்டால் தப்பாக நினைத்துக் கொள்வார்களா? என்கின்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.
சரி. இவர்கள் மற்றவரிடம் தான் கேட்க வேண்டாம். செக்ஸ் மருத்துவ நிபுணர்களிடமாவது கேட்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா? இன்னும் ஒரு சிலருக்கு செக்சில் அல்லது ஒரு செயலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். 

ஆனால் இதை எப்படி நமது துணையிடம் கேட்பது என்ற தயக்கம் இருக்கும். நடுத்தர வயதைத் தாண்டிய பலரிடம் செக்சில் ஆர்வம் குறைந்து வருவதாக எங்களிடம் ஆலோசனை பெற வருபவர்களின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டோம். 

தங்களுக்கு வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தில் பலர் செக்சைத் தவிர்த்து விடுகிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக செக்சிலிருந்து விலகிப்போய் விடுகின்றனர்;. 

அன்றாட வாழ்க்கையில் சந்தோஷத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க, வாழ்க்கை அர்த்தம் பொதிந்த விஷயம் என்பதற்கு செக்ஸ் துணை புரியும் என்பதை பலர் உணராததால் இவ்வாறு உள்ளனர்.

தாய்மையடைவது எப்படி?


தாய்மையடைய விரும்பும் பெண்கள் முதலில் தாய்மையடைவது எப்படி நிகழ்கிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டும். தாய்மையடைய அடிப்படையாக இருக்கும் உயிரணு ஆணின் உடலில் வெவ்வேறு பகுதியிலிருந்து உருவாகிறது. விரைப்பையிலிருந்து 5 சதவீதம். `செமைனல் வெஜைக்கிள்' என்ற சுரப்பியிலிருந்து 55 சதவீதம். `பிராஸ்டேட்' சுரப்பியிலிருந்து 35 சதவீதம். `கூப்பர்ஸ் கிளான்ட்' போன்ற சுரப்பிகளிலிருந்து 5 சதவீதம்...! இப்படி வெவ்வேறு பகுதியிலிருந்து வருபவை அனைத்தும் உறவு நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் ஒரே இடத்தில் கலந்து ஒன்றாய் பெண் உறுப்புக்குள் செல்கிறது.

ஒரு பெண் தாய்மையடைய உயிரணு மட்டும்தானே தேவை. இப்படி விதவிதமாய் திரவங்கள், விதவிதமான இடங்களிலிருந்து வர வேண்டிய அவசியம் என்ன?-என்ற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். ஐந்து சதவீத உயிரணு தன் பணியை சிறப்பாய் செய்ய, இயற்கை ரசாயனங்களும், ஊக்கிகளும் தேவைப்படுகின்றன. அதைத்தான் இதர 95 சதவீத திரவமும் செய்கிறது.
உயிரணு பெண்ணுறுப்புக்குள் சென்றடைந்ததும் முதலில் கெட்டியாகும். பின்பு திரவம் போல் நீர்த்துப்போகும். இந்த செயல்பாடுகள் நிகழ்ந்த பின்புதான் உயிரணு நீச்சலடித்துச் செல்ல முயற்சிக்கும். பெண்ணின் உறுப்பில் காரத்தன்மைகொண்ட அமிலம் உண்டு. அந்த காரத்தன்மை, உயிரணுவின் உயிர்த்தன்மையை குறைத்துவிடாமல் இருக்க உயிரணுவோடு கலந்திருக்கும் திரவம் செயல்பட்டு, உயிரணு வேகமாக நீந்திச் செல்ல உதவும். ஒரு முறை உடலுறவு கொள்ளும்போது வெளியாகும் உயிரணுவில் 2 கோடி முதல் 10 கோடி உயிரணுக்கள் இருக்கும். அவைகளுக்கு கண் கிடையாது. அவை நீச்சல் அடித்து முண்டியடித்து செல்ல `பிரக்டோஸ்' என்ற சக்தி உதவும். அதனால் உயிரணு மட்டுமின்றி இதர திரவங்களும் கருத்தரிப்பிற்கு மிக அவசியம்.

உறவு முடிந்ததும் அனைத்தும்(விந்து) வெளியே வந்து விடுகிறது என்று நீங்கள் எண்ணலாம். ஏன் என்றால் இயற்கையாகவே ஐந்து சதவீத உயிரணுக்கள் மட்டுமே செயலாக்கத்திற்காக உள்ளே செல்லும். அதற்கு துணைபுரியும் 95 சதவீத திரவமும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். அதை பார்த்துவிட்டுத்தான் நீங்கள் அனைத்தும் வெளியே வந்துவிடுவதாக நினைக்கிறீர்கள். உறவு முடிந்ததும் சிறிது நேரம் எழுந்திருக்காமல் படுத்துக்கொள்ளுங்கள். மேலும் உறவு முடிந்த உடனே சோப்பு பயன்படுத்தி உறுப்பு பகுதியை சுத்தப்படுத்தவும் வேண்டாம்.

உற்சாகம் தரும் உறவு



உடலிலும், மனத்திலும் தெம்பு இருக்கிற வரை செக்ஸ் உறவில் ஈடுபடலாம. வயதையோ, குடும்ப சூழ்நிலையையோ நினைத்து அதைத் தவிர்க்க வேண்டியதில்லை. உங்கள் உறவில் உற்சாகம் பிறக்க இதோ சில ஆலோசனைகள்....

வேலை, குடும்பம் போன்ற விஷயங்களுக்கு மத்தியிலேயே உழன்று உழன்று உடலின் தேவைகளை நாம் புறக்கணித்து விடுகிறோம். களைப்பின் காரணமாக செக்ஸ் உறவைத் தவிர்த்து விட்டுத் தூங்கப் போகும் தம்பதியரே பலர். ஆனால் அந்தரங்க உறவுக்குக்களைப்பைப் போக்கும் சக்தி உண்டு என்கிறது மருத்துவம். எனவே அதைத் தவிர்க்காதீர்கள்.

சந்தோஷமாக இருக்கும் போது உறவு கொள்வதை விட, மனம் சோகமாக, சோர்வாக இருக்கும்போது உறவில் ஈடுபடுவதே சிறந்த தாம். அப்போது அதிக பட்ச இன்பம் கிடைப்பதாக சொல்லப் படுகிறது.

குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தினத்தில் உங்களுக்குள் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அம்மாதிரி நாட்களில் உங்கள் கணவரிடம் முன்கூட்டியே அதைத் தெரிவித்து விடுங்கள். அவராக வந்து கேட்க ட்டும் என்று உங்கள் உடல் தேவைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒல்லியோ, குண்டோ. நெட்டையோ, குட்டையோ, கருப்போ, சிவப்போ. எப்படியிருந்தாலும் சரி. நீங்கள் தான் உலகத்திலேயே பேரழகி என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைப்பே உங்கள் முகத்தில் ஒருவித அழகைத் தரும். உங்களைக் கவர்ச்சியாகவும் காட்டும்.

உங்களுக்கு உறவு தேவைப்படும் நாளில் உங்கள் கணவருக்கு ஆர்வ மில்லாமல் இருக்கலாம். அது தெரிந்தால் அவரைக் கட்டாயப்படுத் தாதீர்கள். பேச்சால், நடவடிக்கைகளால் அவரது மூடை மாற்ற முடிந் தால் ஓ.கே. இல்லாவிட்டால் இருவருக்கும் பிடித்த ஏதேனும் விஷயங் களைப் பற்றிப் பேசிக்கொண்டிருங்கள். நாளைய பொழுது இதைவிட இனிமையானதாக, இருவருக்கும் உகந்ததாக அமையலாம். யார் கண்டது?

உறவில் உச்சக் கட்டம் என்பதெல்லாம் பெண்ணுக்குப் பெண் வேறு படக் கூடிய விஷயம். அது உடல் சம்பந்தப்பட்டதே இல்லை. மனம் சம்பந்தப்பட்டது. எனவே உச்சக்கட்டத்தை அடைந்தே தீர்வது என்ற எண்ணத்தில் உறவில் ஈடுபடாதீர்கள். இயல்பாய் இருங்கள். உறவில் மனம் முழுமையாய் லயிக்கும் போது எல்லாம் உங்கள் வசமாகும்.

உறவு கொள்ளும் போது உங்கள் உடல் ஊனங்களைப் பற்றிய நினை ப்பு வேண்டாம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்களால் உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது.

உறவின் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய எண்ணங்கள்...

என் மார்பகங்கள் ரொம்பவும் பெரியதாக அல்லது சிறியதாக இருக்கின்றனவோ?

எனக்கு தினமும் செக்ஸ் தேவைப்படுகிறது. அது தெரிந்தால் அவர் என்னைப் பற்றித் தவறாக நினைப்பாரோ?

ரொம்பவும் குண்டாக இருப்பதால் நம்மால் நம் கணவரை முழுமை யாகத் திருப்திப்படுத்த முடியுமா?

ஒரு வேளை என்னால் அவரைத் திருப்திப்படுத்த முடியாவிட்டால் அவர் என்னை வெறுத்து, ஒதுக்கி விடுவாரோ?

போன்ற நினைவுகள் உங்களிடம் தோன்றுவதை தவிர்த்தல் மிக முக்கியம்!

தாம்பத்யம் - மனம்விட்டுப் பேசுங்கள்


1. செக்ஸ் பற்றி எப்போது, எப்படி விவாதிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்பதை இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ள வேண்டும். உடலுறவு முடிந்ததும் பேசுவது சிலருக்கு இதமாக இருக்கும். சிலருக்கு மறுநாள் ஓய்வு நேரத்தில் பேசுவது பிடிக்கும்.

2. பேசும்போது எனக்கு இவ்வாறு இருந்தால் பிடிக்கும். நான் இதுபோன்று விரும்புகிறேன் என எடுத்துக்கூறுங்கள். உனக்கு இவ்வாறு செய்யத் தெரிய வில்லை என புகார் கூறாதீர்கள்.

3. புதிதாகப் படித்த புத்தகத்திலிருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் யோசனைகளைத் தெரிவிக்கலாம்.

4. ஒரு குறிப்பிட்ட செக்ஸ் முறை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களையே நிராகரித்ததாக நினைக்காதீர்கள். உதாரணமாக வாய்வழி செக்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். உங்கள் மனைவி அதை விரும்பவில்லை எனில், உங்களையே அவர் விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளாதீர்கள்.

5. உங்கள் கணவருக்கு ஒரு குறிப்பிட்ட செக்ஸ் முறை பிடிக்கும் என்பதால், எப்போதுமே அதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என அர்த்தமில்லை. மாறுதல்கள் சில நேரங்களில் உன்னதமாக இருக்கலாம்.

6. எல்லா மனிதர்களும், எல்லா நேரங்களிலும் உடலுறவில் ஈடுபட விரைப்புத் தன்மை அடையவேண்டியதில்லை. சில நேரங்களில் விரைப்புத்தன்மை அடைய முடியாமல் போகலாம். அவ்வாறு இருந்தால் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் எப்போதாவது நேர்வதுதான் இது. தொடர்ந்து விரைப்புத்தன்மை இல்லாது போனால் மனைவிக்கும் தெரிவித்து, செக்ஸ் மருத்துவ ஆலோசகரை நாடுங்கள். நீங்களும் மனைவியும் இதைப்பற்றி சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள்.

செக்ஸ் பற்றி பேசுவது, புதிய நடவடிக்கையில் இறங்குவது நல்ல பெண்ணுக்கு அழகல்ல, அதிக செக்ஸ் உணர்வை காட்டுவது, வெளிப்படுத்துவது, நாடுவது நல்ல பெண்ணிற்கு அடையாளமல்ல என்ற கருத்து நம் நாட்டில் நிலவுகிறது.

திருப்தி அடைந்ததை மனைவி கணவனிடம் காட்டுவது அல்லது அதிருப் தியை காட்டுவது தவறு என்று எண்ணுகிறார்கள் பெண்கள். இந்த எண்ணம் கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது பல பெண்களுக்கு தெரிவதில்லை. திருப்தியை வெளிப்படுத்தும்போது கணவனுக்கு மனைவி மீது கூடுதல் அன்பும், பாசமும், நேசமும் உண்டாகிறது. அதிருப்தியைச் சொல்லும் போது, கணவனிடம் செல்லமாக அனுசரணையுடன் கூறவேண்டும். இது போன்றே கணவனும் மனைவியிடம் தனது திருப்தி, அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

செக்ஸ், வாழ்நாள் முழுவதும் விருப்பமான ஒரு செயலாக இருக்க வேண்டு மெனில்- செக்ஸில் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

செக்ஸைப் பொறுத்தவரையில், புரிதல் என்பது சமமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கலாம். இதனை மருத்துவர், நூல், ஈகரை இணையம், மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவை மூலம் தீர்க்கலாம்.

ஒரு நடவடிக்கை கணவனுக்குப் பிடித்து, மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றால்- பிடிக்காததை மேற்கொள்ளுமாறு மனைவியிடம் கணவன் வற்புறுத்திடக்கூடாது. அந்த செய்கை தவறல்ல என்பதை புரிய வைத்து, மனைவிக்கு விருப்பம் உண்டானால் ஈடுபடலாம்.

மணமாகி பல ஆண்டுகளான தம்பதிகளிடம்கூட, வெளிப்படையாக தங்கள் செக்ஸ் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. வயதான பின்பும்கூட பலர் செக்ஸ் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். இது நவீன யுகம். பரஸ்பரம் செக்ஸ் பற்றி தம்பதிகள் எந்த கூச்சமும் இல்லாமல் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்புகள் உள்ளன. நல்ல செக்ஸ் டாக்டரின் ஆலோசனை களைப் பெற்று தங்கள் மனக்குறைகளைப் போக்கிக்கொள்ள முன் வரவேண்டும்.

பெண்களின் உச்சகட்ட அறிகுறிகளை உணர்வீர்களா?



நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட்டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியாதது. மிக ஒரு சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிகளைக் கொண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

அந்த நிலையில் பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும்., அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன. முக்கியமாக இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதற்கு மேல் உடலுறவில் ஈடுபட விருப்பம் காட்ட மாட்டார்கள். அதை வைத்து உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதாகத் தெரிந்து கொள்ளலாம்.

தவிர, குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)


தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.

தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல்.

இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை
இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை
சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.

முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.

இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.

தாம்பத்திய கணக்கு


நான் 27 வயது பெண். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. நானும், என் கணவரும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். எனக்கு வர வர செக்ஸ் மீது ஈடுபாடு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கி யிருக்கிறது. குழந்தைக்காக `தாம்பத்யம்` வைத்துக்கொள்ள வேண்டியது இருப்பதால், நாங்கள் எந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதைக் கூறவும்?

பதில்:- நாள் குறித்து வைத்துக்கொண்டு கணவனும்- மனைவியும் தாம்பத்ய உறவில் ஈடுபடுவது நல்லதல்ல. தாம்பத்யம் மிக இனிமையானது. கணவன், மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், அன்னியோன்யத்தையும் வளர்க்கக்கூடியது. மனதுக்கும், உடலுக்கும் மகிழ்ச்சிதரக்கூடிய இன்பம் நிறைந்த இந்த `உறவை' குழந்தை பெறுவதற்காக மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் அணுகுவது சரியல்ல. குழந்தை பெறுவதற்காக மட்டுமே செக்ஸ் வைத்துக்கொண்டால் உங்களுக்கு மன நெருக்கடிதான் அதிகமாகும்.

மருத்துவ ரீதியாக `கருத்தரிப்புக்கு ஏற்றவை' என்று குறிப்பிடப்படும் சில நாட்கள் இருப்பது உண்மை. அந்த நாட்களில் மட்டும் உறவு வைத்துக்கொள்ளாமல் எல்லா நாட்களிலும் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதும் உண்மை.

ஒரு வாரத்தில் 3 முதல் 4 தடவை உறவு கொள்கிறவர்களில் 51 சதவீதம் பேர் கருத்தரிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். 2 முதல் 3 முறை மட்டுமே உறவு கொண்டால் கருத்தரிப்பு சதவீதம் 46 சதவீதமாகக் குறையும். ஒன்று அல்லது இரண்டு தடவை மட்டும் உறவு கொள்ளும்போது 32 சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு. வாரத்தில் ஒரு தடவைக்கும் குறைவாக உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு 17 சதவீதமாக குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் வாரத்தில் நான்கு தடவைக்கு மேல் உறவில் ஈடுபடும் பெண்களில் 83 சதவீதம் பேர் கருத்தரிக்கிறார்கள்.

நீங்கள் கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம் என சில நாட்களை குறித்து வைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் அது நிர்ப்பந்தம் ஆகிவிடும். அதை கணக்கு பார்த்து செய்யும் கட்டாய வேலை போல் கணவரும் கருதத் தொடங்கிவிடுவார். ஆசைஆசையாய் சந்தோஷ கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ வேண்டிய பரவச சங்கமத்தை கட்டாய கடமையாக நினைத்தால், மன அழுத்தம் தோன்றி கருத்தரிப்பது தாமதமாகும்.

ஒரு வேளை கருத்தரித்து விட்டாலும், `நாம் தான் தாய் ஆகப் போகிறோமே.. இனியும் ஏன் உடலுறவில் ஈடுபட வேண்டும்` என்ற எண்ணம் உருவாகி, அதுவே உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ஜென்மத்தையே சுவாரஸ்யமில்லாததாக்கி விடும். அதனால் வாழ்க்கையை தாம்பத்யத்தின் மூலம் ரசியுங்கள். அப்படி ரசிக்கும் வாழ்க்கையின் பரிசாக உங்கள் கர்ப்பம் அமையட்டும். உங்களுக்கு இந்த இளம் வயதிலே செக்ஸ் மீது ஈர்ப்பு இல்லாமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.

கணவருடன் கலந்து பேசி, செக்ஸாலஜிஸ்டை சந்தித்து ஆலோசனை பெற்று வாழ்க்கையை இன்பமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

திருப்தியான சுகம்!



ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும்
அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள். ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் பெண்கள்.
இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம். பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே.

இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க.

அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது. சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை.

அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும். இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை....சந்தோஷம் மட்டும் தான்....

கருத்தரிப்பதற்கு ஏற்ற உறவு கொள்ளும்முறை எது?


பெண் கீழேயும், ஆண் மேலேயும் என்பதுதான் கருத்தரிப்புக்கு ஏற்ற சரியான முறையாகும். இந்த முறையில் உறவு கொண்டு முடித்த பின்னர், பெண் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது எழுந்தரிக்காமல் இருப்பது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் ஆணின் உயிரணுக்கள், பெண் உறுப்பில் இருந்து வெளியே
வருவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால் கருத்தரிக்க ஆர்வப்படுபவர்கள் உறவு நேரத்தில் பெட்ரோலியம் ஜெல்லி, க்ரீம் போன்றவற்றை உபயோகிக்க கூடாது. இவை ஆணின் உயிரணுவை செயலிழக்கச் செய்து விடும். அவசியத் தேவை எனும்பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையின்படி பேராபின் மட்டும் உபயோகபடுத்திக் கொள்ளலாம். செயற்கை மற்றும் இயற்கை என எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் உறவு கொள்வதே சிறந்ததாகும்.


3 நிமிடம் போதுமாம்


மெல்பர்ன், மார்ச் 6: சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3
நிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள்
நம்புகிறார்கள்.
அவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
இந்தப் பின்னணியில் இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு முக்கியத்துவம்
வாய்ந்தது.
டாக்டர் எரிக் கோர்ட்டி என்ற அமெரிக்க நிபுணர் தலைமையிலான குழு இந்த ஆய்வை
நடத்தியது.
அமெரிக்கர்களும் கனடியர்களும் இதன் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். 7
முதல் 13 நிமிடம் வரை உறவு கொள்வதை "விரும்புவதாக'' அவர்கள் கூறினர்.
ஆனால், 3 முதல் 7 நிமிடம் வரையிலான உறவு "போதுமானது" என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.
பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு நீடிப்பதை விரும்புகின்றனர். ஆனால்,
பெண்கள் குறைவான நேரமே போதும் என்கின்றனர்.
இந்த அனுபவத்தை நேரத்தால் அளவிடுவது சரியல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
3 நிமிடத்துக்கு குறைவான உறவு "ரொம்ப குறைச்சல்'', 7 நிமிடத்துக்கு அதிகமான
உறவு "ரொம்ப ஓவர்" என்று மதிப்பிடப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எத்தனை
நிமிட உறவு சிறப்பானது என்பதை தீர்மானிக்க இருக்கும் உலகளாவிய ஆய்வின் முதல்
கட்டம் இது. மற்ற நாடுகளிலும் இது விரைவில் நடத்தப்பட இருக்கிறது.

உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க....


உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.

சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது.

நல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு 'டொம்' என்று 'வெடி' வெடிக்கும். இந்த 'கேஸ் லீக்', பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.

இப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?.

செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.

இதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம்.

அடுத்தது 'கேஸ்' டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.

இதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.

இப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.

உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்;ஆய்வுகள்?


நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!
ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்படி எத்தனையோ சுவர்கள எழுப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எதுவுமே வெளியில் தெரியாமலும், விளங்காமலும் போவதற்க்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளைவு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையான சிக்கல்களையும், குழப்பங்களையும் தொடர்ந்து சேர்த்துக்கிட்டே வர்றோம். இதெல்லாம் என்னைக்கு பூதாகரமா வெடிக்கப்போவுதோ தெரியல?!
செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்தனையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்சக்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட்டா, ஒரு பதில் இல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைத்தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்பது விவரிக்கமுடியாத, அனுபவித்துமட்டுமே உணரக்கூடிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உளவியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம் வாங்க….
உச்சக்கட்டம் அப்படீங்கிறது அடிப்படையில, பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!


ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலியல் ஆய்வுகளும்!

இந்த உச்சக்கட்டத்தை ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல்லைன்னா என்ன உசுரா போய்விடும் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!
இந்தப் பிரச்சினை அதுபாட்டுக்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!
உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்கிறார் இஷக். கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே என்கிறார்!
உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணுக்கு ஒரு பகல்கனவாகவே இருக்கும் உடலுறவின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது! பெண்களின் உச்சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!
பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திறமைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் மருந்துகள் என்று பார்க்கையில், ஒரு மருந்து சரியா, தவறா என்றறியும் சோதனை முயற்ச்சிகளே என்கிறார் இஷக்!
ஆர்கஸம் குறித்த குழப்பங்களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வுகளும்!
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!
ஆர்கஸம் தொடர்பான குழப்பம் ஒரு பக்கமென்றால், அனார்கஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதாரணமாக, கடந்தகால பாலியல் துன்புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற்றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோன திருமண உறவுகள் மற்றும் செக்ஸ் குறித்த விவாதமின்மை ஆகியவை வேறு சில காரணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகிச்சைகள்!
வேறு சில பெண்களுக்கு, அனார்கஸ்மியாவுக்கான காரணங்கள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோளாறுகள், ஃபைப்ரோமயால்ஜியா மற்றும் அத்தீரோஸ்க்ளீரோசிஸ் என்னும் கொலஸ்டிரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகியவை என்கிறது ஒரு ஆய்வு! குழந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின்மையும் மற்றுமோர் காரணமாம். இம்மாதிரியானவர்களுக்கு, ஹார்மோன் மாத்திரைகளான டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலும், டெஸ்டோஸ்டீரோனால் ஆண்தன்மை அதிகரிக்கும் ஆபத்தும், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!
அனார்கஸ்மியாவுக்கு தீர்வுகாண வேண்டும் பல ஆய்வுகள்!
பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்க்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப்.டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மருந்துகள் இதுவரை இல்லை!! இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லிபான்செரின் (flibanserin) என்னும் மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இஷக் அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஹார்மோன் தெரபிகள், வயாக்ரா போன்ற மருந்துகள் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளுக்கு பலனளிக்கக்கூடியவை என்று முந்தைய சில ஆய்வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு சொன்னாலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 20 பெண்கள் என்றும், அதில் 10 பேருக்கு இந்த எண்ணையும், மற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொருளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை என்கிறார் இஷக்!
ஆக, உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளான அனார்கஸ்மியா போன்றவற்றிற்க்கு தீர்வு காண, புதிய மருந்துகளை சோதிக்கும்போது, பெரிய எண்ணிக்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவும் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!!

பாலுறவுக்குப் பிந்தைய செயலை விரும்பும் பெண்கள்


பொதுவாகவே பாலுறவு வைத்துக் கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் செயல்களை (ஃபோர் பிளே - Foreplay) அதிகம் பெண்கள் விரும்புவார்கள் என்று தெரிய வந்துள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பாலுறவு கொண்ட பின் அதிக நேரம் துணையுடன் செய்கைகள் வைத்திருப்பதை விரும்புவதாக

புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சுமார் 5,600 ஜப்பான் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50 விழுக்காடு பெண்கள், உறவு கொண்ட பின் நீண்ட நேரம் தங்கள் துணையுடன் செயல்பாட்டில் இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

44 விழுக்காட்டினர் அதிக நேரம் ஃபோர் பிளே-வை விரும்புவதாகவும், 38 விழுக்காட்டினர் அதிக நேரத்திற்கு பாலுறவுப் புணர்ச்சி கொள்வதை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். தங்களின் துணையுடன் வைத்துக் கொள்ளும் பாலுறவுப் புணர்ச்சி பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று 38.8 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை பாலுறவுக்கு முன் அதிக நேரம் ஃபோர்பிளே-வையும், உறவு கொண்ட பின்னர் செய்கைகளையும் விரும்புவதே முக்கியமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 விழுக்காடு பெண்கள் பாலுறவின் போது தங்கள் துணை சுயநலத்துடனேயே நடந்து கொள்வதாகக் கூறியிருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?


ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.
இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.
சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.
பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்

படுக்கையறையில் `கவர்ச்சியாக’ திகழ…


பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது.

மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?

சில டிப்ஸ்…

`செக்ஸி’யாக உணருங்கள்

சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்’ செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.

`சுவிட்சுகளை’ அறியுங்கள்

உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடம்பை நேசியுங்கள்

கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்தனை பொங்கட்டும்.

படுக்கையறைத் திறமை

படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்

சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.

பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்

படுக்கையில் `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்

சும்மா `தேமே’ என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.

புதிய இடம் செல்லுங்கள்

மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.

பார்ட்டி, விருந்து கவனம்

`பார்ட்டி டின்னர்’, விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு’ வெட்டிவிட்டு வந்தால் அது மந்தத்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பாக’ இருக்க வேண்டும் என்று
நினைத்தால் நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்.

சுவாரசியம் கூட்டுங்கள்

உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறிவருவதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். போரடிப்பதைத் தவிர்க்க பாலியல் தொடர்பான நூல்கள், புத்தகங் களைப் படிக்கலாம். படிக்கச் செய்யலாம். `அந்த மாதிரி’ படங்களைப் பார்க்கலாம்.

சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா ? +18


ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.
ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.
ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் ‘பார்ட்டி’யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.
உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.
இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.
பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.
பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா …என்று ‘பாப்பையா’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்!

முத்தம் தர முத்தான யோசனைகள் பத்து!


அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்!
காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம்.
சீனப் பழமொழி ஒன்று… முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல… குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்! (அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா…)

ஆனால், முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு…?
டென்ஷனாக வேண்டாம். கேள்விக்குக் காரணம் உண்டு!
ஏதோ வம்படிக்கு இழுத்துப் பிடித்து பசக் என்று கொடுப்பது… கச முசா என்று அவசரமாக திணித்துத் தொலைவது… எசகு பிசகாக குதறி வைப்பது… லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இதெல்லாம் முத்தமில்லீங்கோ…!
கமல்ஹாசனோ, இம்ரன் ஹஸ்மியோ கதாநாயகிக்கு சட்டென்று இச்சொன்று தருவார்களே… அது போல் செய்வது பெரிய கம்ப (அல்லது, காம) சூத்திரெமல்லாம் இல்லீங்க… ரொம்ப சிம்பிள். இதற்கு கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், பத்து. இந்த பத்து கட்டளைகளை பின்பற்றி கிஸ் அடித்துப் பாருங்கள். அப்புறம், உங்கள் காதல் அல்லது கல்யாண வாழ்க்கையில் எல்லா நாளும் பவுர்ணமி தான்!
முதல் கட்டளை:
சத்தான முத்தத்துக்கு முதல் எதிரி… வேற என்னங்க… “தாத் கி பத்பூ” என்று தூர்தர்ஷன் காலத்தில் இருந்து சொல்வார்களே, அந்த வாய் துர்நாற்றம் தான். பேசினால் பூ வாசம் புறப்பட வேண்டாம். குறைந்த பட்சம் குமட்டிக் கொண்டு வரக் கூடாது.
ஓவராக ‘தம்’மடித்தல், புகையிலைப் பொருட்கள், உடல் நலக் கோளாறு, கண்டதைத் திண்பது என்று ஏகப்பட்ட காரணங்களால் வாய் நாற்றம் ஏற்படுகிறது.
காதலியோ, காதலனோ, மனைவியோ இது பற்றி பளீரென்று வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், துர்நாற்றத்துடன் தரப்படும் முத்தத்தில் அத்தனை சுவாரஸ்யமோ, காதலோ இருக்காது டியர்… அதோடு, அடுத்த முறை முத்தம் தர முற்பட்டால் பார்ட்னர் அதிர்ச்சி அடையக் கூடாது தானே…?
எனவே, முத்தம் கொடுக்க மூஞ்சியை நீட்டும் முன் கொஞ்சம் வாய் கொப்பளித்துக் கொள்ளுங்கள். பிரஷ் போட்டு பல் துலக்கி விட்டுப் போனால் இன்னும் நலம். (நெருங்கி வருவாய்… நெருங்கி வருவாய்… என்ற க்ளோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்)
கட்டளை இரண்டு:
முத்தம் கொடுக்கும் போது இதழ்களை குவிப்பது மட்டுமல்ல… வாயை திறப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது.
உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்க வழியே இல்லாமல் வாயை மூடிக்கொள்ளக் கூடாது. அதேசமயம், எதிரே இருப்பவரை விழுங்கிவிடும் அளவுக்கு அகககககலமாகவும் வாயை திறக்கக் கூடாது.
உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் லிப்-டு-லிப் ஆரம்பித்து, பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் சுவை கூடும்.
மூன்றாம் கட்டளை:
நானும் கொடுக்கிறேன் பேர்வழி என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து, ரப்-அன்ட்-டப்பாக இருந்தால், வெறும் சத்தம் தான் வரும். முத்தமாக இருக்காது!
உங்கள் பார்ட்னர் எப்படி கொடுத்தால் ரசிக்கிறார், எந்த மூவ்மென்டை ருசிக்கிறார், என்ன செய்தால் பிடிக்கிறது என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்தும் போது தான், நீங்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, முத்தத்தில் ஒருவித தாளகதி வேண்டும். இருவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
கட்டளை நான்கு:
சொல்லித் தருவதில்லை மன்மதக் கலை என்பதெல்லாம் உண்மை தான். அதற்காக, முத்தம் கொடுப்பதெல்லாம் கூடவே பிறந்த கலையாகி விடுமா என்ன? கற்றுக்கொள்ளுங்கள்.
யாருக்கும் எடுத்த உடனேயே உணர்வுபூர்வமாக முத்தம் கொடுக்க வந்துவிடாது. அதற்கும் ஒரு சின்ன டிப்ஸ் உண்டு. கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்… காப்பி அடியுங்கள்… உங்களவர் என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அதையே நீங்களும் செய்தால் போதும். கொஞ்ச நாளிலேயே கிஸ் அடிப்பதில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்.
ஐந்தாம் கட்டளை:
முத்தம் கொடுக்கையில், கைகள் என்ன செய்கின்றன என்பது முக்கியமாக அம்சம்.
ஏதோ முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே தப்பி ஓடிவிடப் போகிறார் என்பதைப் போல தலை முடியையோ, இடுப்பையோ அழுந்தப் பிடித்துக் கொள்ளக்கூடாது. முத்தம் என்பது அன்பைத் தரும் களம். வலி ஏற்படக்கூடாது. கைகளை கண்ட இடத்தில் வைக்கவும் கூடாது. அதிலும் ஒரு அழகுணர்ச்சி தேவை.
உங்கள் பார்ட்னரின் கைகள், முதுகு, பின்புறம், கழுத்து, இடுப்பு போன்றவற்றின் மீது மெல்ல ஊர்ந்து செல்லலாம்.
கவனம்… உணர்ச்சி வசப்பட்டு காயம் ஏற்படும் அளவுக்கு கிள்ளி வைத்தால் அவ்வளவு தான்.
கட்டளை ஆறு:
முத்தத்தில் நாக்கின் பங்கு ரொம்ப முக்கியமானது. மெல்ல ஊடுருவி, உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். ஒரு ஓவியனின் தூரிகை போல நளினமாக நடமாட வேண்டும். ஆனால், அதற்கும் அளவு உண்டு. உள் நாக்கை கவ்விப் பிடிப்பது போலவோ, பல்துலக்கும் போது வாயின் நாலாபுறத்திலும் சுழன்றடிப்பது போலவோ செய்யக்கூடாது.
நாக்கின் நுனி மட்டுமே மாய வித்தைகளை செய்ய வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், எவ்வளவு பொறுமையாக, மென்மையாக நடந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகும் உற்சாகம்.
ஏழாம் கட்டளை:
முத்தங்கள் சிந்தும் போது எச்சில் அமிர்தமாகும் தான். அதற்காக, நாய் குட்டி போல் முகமெல்லாம் சளக்… சளக் என்று எச்சிலாக்கி வைக்கக்கூடாது. அது எரிச்சல் ஏற்படுத்தும்.
கட்டளை எட்டு:
முத்தம் மட்டுமே இரண்டு தனி நபர்களை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இணைக்கிறது. இந்த இணைப்பு தான், ஆழமான, திருப்திகரமான உறவுக்கு வழிகோலுகிறது. எனவே, ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் படுக்கையை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அழகுணர்ச்சி வெளிப்பட வேண்டும். அன்பு மழை பொழிய வேண்டும்.
இது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், அதற்கும் தற்காப்பு வழி உண்டு.(இதுக்கெல்லாமா? என்று கேட்கக்கூடாது.)
முத்தத்துக்கு வாய் நீளம் தான் முக்கியம். கை நீளத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். எக்குத் தப்பான இடத்தில் சேட்டை செய்வதை (அட்லீஸ்ட் நாகரீகம் கருதியாவது) தவிர்க்கலாம்.
அதேசமயம், நீங்கள் இரண்டு பேருமே அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில், நோ லிமிட்ஸ்…
ஒன்பதாம் கட்டளை:
முத்தமிடும் போது, கண்களை பப்பரப்பே என்று திறந்து வைத்துக் கொண்டு திரு திருவென விழித்தபடி பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. ரோட்டில் செல்லும் போது தான் கண்களை அகல திறந்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியின் பாதையில் கண்கள் மூடியிருந்தால் தான் வழி எளிதாகத் தெரியும்.
அதற்காக, என்ன நடந்தாலும் கண்களை திறக்க மாட்டேன் பேர்வழி என்று இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாலும் கண்றாவியாக இருக்கும். அவ்வப்போது கண் மலர்ந்து, உங்கள் பார்ட்னரின் மலர் முகத்தை பார்த்தால் மனது மலரும். (எப்புடி…?)
கட்டளை பத்து:
கான்பிடன்ஸ் கண்ணா… கான்பிடன்ஸ்…. அது ரொம்ப முக்கியம்.
முத்தத்தை யார் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. தருபவர், பெறுபவர் இருவருமே முழு மனதோடு, உறுதியோடு, நம்பிக்கையோடு முத்தமிட வேண்டும்.
இது எதற்கென்றால், பத்து அல்ல பத்தாயிரம் டிப்ஸ் கொடுத்தால் கூட, முத்தத்தின் உச்சத்தில் எதுவுமே நினைவில் இருக்காது. எனவே, முத்தமிடும் போது தன்னம்பிக்கையுடன் அணுகவும்.
ஆக… இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால், இந்த நாள் மாத்திரமல்ல… வாழ்க்கையின் எந்த நாளிலும் முத்தம் சத்தாக இருக்கும். மகிழ்ச்சியின் வித்தாக இருக்கும்.
ஒரு விஷயத்தை சொன்னால் மறந்து விடக்கூடும். காட்டினால் ஓரளவு நினைவில் இருக்கும். ஆனால், செய்து பார்த்தால் மனதில் எப்போதும் பளிச்சென்று தங்கி விடும். இதன் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…
“போதும்… போதும்… எந்த ஆணியும் புடுங்கத் தேவையில்லை. நாங்களே…” என்று யாரும் கிளம்பும் முன் ஒன்றை இறுதியாக சொல்லி நிறைவு செய்கிறேன்…
வேற என்னங்க… ஹேப்பி கிஸ்ஸஸ்!

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.
 டாக்டர். காமராஜ்

அட்டகாசமான ஆர்கஸத்திற்கு


ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது.

பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.

ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.

92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.

ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.

உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு


தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள்.

ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள்.

அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்...!

கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.

ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்

ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்...! கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்

அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது.

லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.

உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள்.

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்

சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே...!

பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்


இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்புசென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம்- அதில் அவர்களது விருப்பங்கள்- வெறுப்புகள்- செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்’ போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். அந்த சர்வேயை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட சர்வே, திருமணமான பெண்களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப்படுத்து கிறது. அதில் சில சிந்திக்கவைக்கும் விதத்தில் உள்ளது. “இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை பொதுமக்கள் படிக்கும்போது பெண்களின் மாறிவரும் மன நிலையையும், மாறிவரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்கபடி தங்கள் மணவாழ்க்கையை அமைத்துக் கொள் வார்கள்” என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளியிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்’ முக்கிய விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்து தமிழக பெண்களிடம் இப்போதும் வேரூன்றி இருக்கிறது. கணவருக்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயதுவாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

`தாம்பத்ய தொடர்பில்’ உள்ள நிறை குறைகளை கணவரிடம் விவாதிக்கும் விஷயத்தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந்திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கிறார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காது’ என்று 42 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின்றி பேசுவோம்’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் `அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம்பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள்.

உறவுக்கு முந்தைய `முன்விளையாட்டுகள்’ விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுகளை திகைக்க வைத்திருக்கிறார்கள். 92 சதவீதம் பேர் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

ஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. 81 சதவீத பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலுவலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து – சீக்கிரம் வந்துவிடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்-’ என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். `மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே ஆசை அதிகரிக்கும். அப்போது நடை, உடை, பேச்சு மூலம் எளிதாக கணவரை ஈர்த்து தயாராக்கிவிடுவோம்’ என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

பின்விளைவற்ற கருத்தடை சாதனமாக பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக `காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது


நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.

தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது.மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப்பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது.இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர்களும் அவதானிக்க ப்பட்டனர். அனால் அவர்களில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.

வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை.இந்திய உணவுகளில் இவை பெருமளவு பளன்படுத்தப்படுகின்றன.வெந்தயத்தில் saponins எனப்படும் மூலப் பொருள் கலந்துள்ளது. இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக்கூடியது.

படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கிளர்ச்சி அடைவது என்பது என்ன?



உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

கற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று?


கற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று?

அழகிய வரவேற்பு
- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
- மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள்).
- மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சினைகளை பெரிதாக்குவதும் போன்றவைதான் திருமண பந்தத்தை முறித்துவிடுகின்றது.
- மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.