Wednesday 29 June 2011

பாலுறவுக்குப் பிந்தைய செயலை விரும்பும் பெண்கள்


பொதுவாகவே பாலுறவு வைத்துக் கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் செயல்களை (ஃபோர் பிளே - Foreplay) அதிகம் பெண்கள் விரும்புவார்கள் என்று தெரிய வந்துள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பாலுறவு கொண்ட பின் அதிக நேரம் துணையுடன் செய்கைகள் வைத்திருப்பதை விரும்புவதாக

புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சுமார் 5,600 ஜப்பான் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50 விழுக்காடு பெண்கள், உறவு கொண்ட பின் நீண்ட நேரம் தங்கள் துணையுடன் செயல்பாட்டில் இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

44 விழுக்காட்டினர் அதிக நேரம் ஃபோர் பிளே-வை விரும்புவதாகவும், 38 விழுக்காட்டினர் அதிக நேரத்திற்கு பாலுறவுப் புணர்ச்சி கொள்வதை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். தங்களின் துணையுடன் வைத்துக் கொள்ளும் பாலுறவுப் புணர்ச்சி பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று 38.8 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை பாலுறவுக்கு முன் அதிக நேரம் ஃபோர்பிளே-வையும், உறவு கொண்ட பின்னர் செய்கைகளையும் விரும்புவதே முக்கியமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 விழுக்காடு பெண்கள் பாலுறவின் போது தங்கள் துணை சுயநலத்துடனேயே நடந்து கொள்வதாகக் கூறியிருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment